Skip to main content

தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

தமிழ் நன்று என்றிரு!

ஒன்று என்றிரு;
தமிழ் நன்று என்றிரு.
இம்மொழிதான் செம்மொழி எனத்
தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு
குன்று என்றிரு எம்
மொழிவளம் குன்று என்றிரு;
பிறமொழி தான்கன்று என்றிரு;
நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு .
இன்றே தொடங்கியிரு;
வன்தமிழராய் நின்றிரு
எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;.
என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு.
கொன்றால் பாவமென்றிரு
தின்றால் போகாதென்று மறு;
ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு
ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ;
தமிழால் பேசி நாவென்றிரு;
நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,
தமிழராய் பிறந்தது பாவமன்று என்றிரு;
இதல்லால் பெரும்பேறு வேறன்றே என்றிரு
இனிமேல் எம்மொழியே
நல்மொழி என நின்றிரு – உன்
காலமே சென்றாலும் காலனே நின்றாலும்
கருவறைத் தமிழே இனிக்கடமை என்றிரு
வணக்கம் நன்று சொல்லவும் ,
நன்றி என்ற சொல்ல நினைந்திரு.;
இன்றும் நாளையும் காலை மாலையும்
வேலை நேரமும் நற்றமிழே பேசித்திரிந்திரு
சாலை, வண்டி , அடையாள அட்டை,
அலைபேசி, தண்ணீரும் என் தமிழ்ச்
சொல்லாய் சொல்லியே என்றும்
நாம் தமிழர் அணியாய் தாரணி வென்றிரு
சந்திரசேகரன் சுப்பிரமணியம்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue