Skip to main content

நான்! – அகரம் அமுதன்


நான்! 


துன்பங்கள் யார்படினும்
துடிக்கின்றவன் பிறர்
கண்ணீரைக் கவிதையாய்
வடிக்கின்றவன்!

கொடுமைக்கு அறம்பாடி
முடிக்கின்றவன்  – அதன்
குரல்வளை நெரித்துயிர்
குடிக்கின்றவன்!

வன்முறை யார்செயினும்
வெடிக்கின்றவன் – அந்தப்
புன்முறை போய்மாளப்
பொடிக்கின்றவன்!

பெயருக்கா எழுதுகோல்
பிடிக்கின்றவன்? –என்றன்
எழுத்தாலே இனப்பகை
இடிக்கின்றவன்!

  • அகரம் அமுதன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue