Posts

Showing posts from November, 2017

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார்

Image
அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்       19 நவம்பர் 2017       கருத்திற்காக.. (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் ( சங்கக் காலம்)   03 முன்னுரை   `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள்  முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன் தோற்றுக் காலம் யாதென அறுதியிட்டுரைத்தல் எவராலும் இயலாது.   பலவகையாலும் அழிந்தன போக எஞ்சியனவாய் நமக்குக் கிடைத்துள்ளனவற்றுள் முழுமை நூலாய் இலங்குவது தொல்காப்பியம் ஒன்றேயாகும்.  தொகை நூல்களா

வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்

Image
அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்       19 நவம்பர் 2017       கருத்திற்காக.. வேண்டா வரன் கொடை!   பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும்  போன கதை ! ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை ! தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுள்ள தாசனே ! வேண்டாம் வரதட் சணை ! அறிவியலர் சி . செயபாரதன், கனடா

எம்மை ஆள எமக்குத் தெரியும்! – ம.குமரவேல்

Image
அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்       19 நவம்பர் 2017       கருத்திற்காக.. எம்மை ஆள எமக்குத் தெரியும்! வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் கருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி தெருவீதி மறவோர் நாம் திறவோர் நாம் மறந்தே உறங்குவதா- மதி பிறழ்வோர் சிரம்தாழ்த்த கரம் உயர்த்தத் தயங்குவதா கடுவெள்ளம் காவிரிகண்டதுபோல் கரைமோதும் அலையெனவே இடுகாட்டுக்கு இவரை அனுப்பவே பறைசொல்லிப் பாடுவோமே கடும் சிலம்பினைஎடடா – கயவர் விடும் புராணப்புரட்டு இடிடா தொடக் க

உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்

Image
அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         19 நவம்பர் 2017         கருத்திற்காக.. உறக்கம் வருமோ ?  சொல்வீர்! எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள் அயர்வைப் போக்கிட வழியெதும் காணா ஆட்சியர் ஒருபுறம்; இழவொலி கேளாமல் இரும்பு நெஞ்சுடன் விழாவில் மூழ்கும் இளைஞர் ஒருபுறம்; ஒப்பனை செய்தே திரையில் வலம்வரும் மினுக்கிகள் எல்லாம் புத்தரைப் போன்றும் வள்ளலார் போன்றும் வேடம் அணிந்து அரசியல் பேசும் நாடகம் ஒருபுறம்; நாடு நலன்பெறும் நல்வழி நோக்கா ஊடக வல்லுநர் உண்மை மறந

கசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா

Image
அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         19 நவம்பர் 2017         கருத்திற்காக.. கசங்கிய  காகிதங்களின் கருணைமனு நகர நரகத்தில் கைவிடப்பட்ட கட்டடங்களாய், தூய்மையையே காணாத கழிவறைகளாய், தூய்மை இந்தியாவில் நாங்கள்! நகரத் திராணியற்ற நத்தையின் முதுகில் நான்காயிரம் பலமேற்றியதில் கல்வி வண்டி கவிழ்ந்தது எங்கள்மேல்தான்! அந்த இண்டு இடுக்கில் எட்டிப்பார்த்தவேளையில் காலைத் திணிக்க இரண்டுறைகள் நூல்களைத் திணிக்கப் பையுறை உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள் எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள் கழுத்துக்குக் கோவணம் மாட்டி மூளையை அம்மணமாக்கினீர்கள்! எங்கள் நாக்கைக் கசக்கியதில் நாண்டுகொண்டது எங்கள் மொழி! பள்ளிக்கழிவறையில் பதைத்துச் செத்தது எங்களுயிர் அடுக்குமாடி வன்புணர்ச்சியில் அழுது செத்தது எங்களுயிர் மாவட்ட ஆட்சியகத்தில் எரிந்து செத்தது எங்களுயிர் அகதிகளின் நாட்டில் அழுகிச் செத்தவையும் எங்களுயிர்களே! மக்கா! கும்பகோணத்தில் கருகிச் செத்தவையும்

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார்

Image
அகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02,  2048 /  நவம்பர் 12  – நவம்பர் 18,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்       12 நவம்பர் 2017       கருத்திற்காக.. (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார் ஆ. பதிப்புரை  & நன்றியுரை பதிப்புரை ( 2002)      தமிழின் தொன்மைச் சிறப்பையும் , முதன்மைச் சிறப்பையும் , தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும்  உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே!   சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல்  சங்க இலக்கியங்களையும் , தொல்காப்பியத்தையும்   அறியும் வாய்ப்பைப் பெற்றிருப்பின் தமிழ் உலக மொழிகளின் தாய் என்பதை நிறுவி இருப்பார் எனப் பன்முறை எடுத்து இயம்பியவர். எனவேதான் , தமிழ் இலக்கியமே பழந்தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதன்மையானது  என்பதைக் கூறி  வரலாற்று ஆசிரியர்க

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01– சி.இலக்குவனார்

Image
அகரமுதல 211, ஐப்பசி 19-25, 2048 /  நவம்பர் 05  – நவம்பர் 11,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         05 நவம்பர் 2017         கருத்திற்காக.. இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல்   ( சங்கக் காலம்)    01–   சி.இலக்குவனார் அ.  முகவுரை, பதிப்புரை முகவுரை   இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.    தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது .  வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன.  வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய அறிவு கிடையாது. தமிழிலக்கியமே பழந் தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதனமை பெற்று நிற்கின்றது. அதனை நேரே அறியாது தமிழர் வரலாறு எழுதப் புகின்,  குருடர் கண்ட யானைக் கதை போன்று அமைவது இயல்புதானே!   இந்நூல், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியலை எடுத்து இயம்புகின்றது; சங்கக் கா