Posts

Showing posts from September, 2017

பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை – தமிழ்சிவா

Image
அகரமுதல 204,  புரட்டாசி 0 8,  2048 / செட்டம்பர் 24 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்         24 செப்தம்பர் 2017         கருத்திற்காக.. பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை  அறிவின் சுடுகாட்டிற்கென அமைந்த வழிகள் ஏராளம் ஏராளம் எழுதுங்கள் எழுதுங்கள் எல்லாத் தேர்வுகளையும் பாடத்திட்டப் படுகுழிகள் எப்போதும் பயன்பாட்டிலேயே இருக்கின்றன மதிப்பெண்களால் சிதைக்கப்பட்ட மனித மூளைகள் வரலாற்றுப் பெட்டிகளில் பாதுகாப்புடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கையுடன் அறுப்பதற்காகவே ஆடுகளும் கோழிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன நித்திரை மன்றங்களின் சுத்தியல்பட்டு சிந்திய இரத்தவாந்திகள் அவ்வப்போது உடனுக்குடனே ‘சுடச்சுட’ அலசப்படுகின்றன பற்பலவற்றை ஆவணப்படுத்தாமலிருப்பது அருமை மீயருமை வருணவழிப் ‘பட்ட’ கல்வியில் கல் மண் முள் கழிவுகள் காளைகளின் கொம்புகளிலிருந்து கறக்கப்பட்ட பாலிலிருந்து கசக்கியெடுக்கப்பட்ட வெண்ணெய்யும் நெய்யும் வீதிவரை மணக்கும் வாசத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன வரலாற்றுப் புகழ்கொண்ட வன்

அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ? – அ.பு.திருமாலனார்

Image
அகரமுதல 204,  புரட்டாசி 01,  2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்         17 செப்தம்பர் 2017         கருத்திற்காக.. அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ ?   அவனவன் வாயா லன்றிப் பிறனெவன் உண்ண வல்லான் அவனவன் கண்ணா லன்றிப் பிறனெவன் காண வல்லான் அவனவன் செவியா லன்றிப் பிறனெவன் கேட்க வல்லான் அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே! தன்னினம் காப்ப தற்கே தகவிலான் தன்னி னத்தின் திண்ணிய நெறியைப் போற்றுந் திறனிலான் தேர்வார் தம்மை அன்னிய ரென்றே யெண்ணி ஆழ்குழி வெட்டி யதனுள் கண்ணிலா னாய் வீழும் கதையிவன் கதையாய்ப் போயிற்றே! பட்டங்கள் பெற்றா லென்ன? பதவிகள் பெற்றா லென்ன? கற்றவர்க் கூடி யொன்றாய் கலந்துரை யாடி யென்ன? உற்றதோ ரினத்தால் மொழியால் ஒற்றுமை யாகா நெறிபால் பற்றுதல் கொண்டு விட்டால் பாரினில் உண்டோ மேன்மை பாவலர் அ.பு.திருமாலனார் http://tamilaalayam.blogspot.in/2008/

யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 202, ஆவணி 18 , 2048 / செட்டம்பர் 03, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      03 செப்தம்பர் 2017       கருத்திற்காக..  (யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர் உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர் அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின் அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே ! வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே என்றெந்த    நாட்டினிலும்   கேட்போ   ரில்லை தேன்சிந்தும்   மலர்மணத்தைச்    சொந்த    மென்று சொல்கின்ற   முட்டாள்கள்    இல்லை   அங்கே கூன்முதுகில்   இருப்பதன்றி    அறிவு   தன்னில் கூன்விழுந்த   குறுமனத்தார்   இல்லை   அங்கே ! இரண்டாம்   உலகத் தமி

மூலிகை பேசுகிறது : செம்பருத்தி – ப.கண்ணன்சேகர்

Image
அகரமுதல 202, ஆவணி 18 , 2048 / செட்டம்பர் 03, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      03 செப்தம்பர் 2017       கருத்திற்காக.. மூலிகை பேசுகிறது : செம்பருத்தி கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமெனக் கொடுத்திடும் ஓர்வரம் அழகெனப் பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும் விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென தீர்வாகும் விதையில்லாப் பதியத்தால் விளைந்திடும் செடியாகும் வேர்இலை பூக்களால் வரும்நோயும் பொடியாகும் சிதையாமல் பூவிதழை சுடும்பாலில் நனைத்திடு சிவந்திடும் பாலினை  அன்றாடம் அருந்திடு பதைத்திடும் பதற்றத்தைப் பக்குவமாய்க் குறைத்திடும் பலமூட்டி  இரத்தத்தை   பயன்பெற ச் செய்திடும் வதைத்திடும்  இதயத்தின்  வலிகளை  மாற்றிடும் வளமான வாழ்விற்கு வழிதனைக் காட்டிடும் செந்நிற வண்ணத்தில் சிரித்திடும் பூவாகும் சீனர்களும் போற்றிடும் சிறப்பான மருந்தாகும் வந்திடும் வெள்