Skip to main content

பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா





பாடுவேன், ஊதுவேன்!


பாட்டுப் பாடுவேன்-நான்
பாட்டுப் பாடுவேன்.
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்.
கேட்டு மகிழவே-நீங்கள்
கேட்டு மகிழவே,
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன்-நான்
கீதம் பாடுவேன்.

குழலை ஊதுவேன்-புல்லாங்
குழலை ஊதுவேன்.
கோகு லத்துக் கண்ணன் போலக்
குழலை ஊதுவேன்-நான்
குழலை ஊதுவேன்.
அழகாய் ஊதுவேன்-மிக்க
அழகாய் ஊதுவேன்.
அனைவர் மனமும் மகிழும் வகையில்
அழகாய் ஊதுவேன்-நான்
அழகாய் ஊதுவேன்.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா :
சிரிக்கும் பூக்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue