Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்




வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி]
மெய்யறம்
இல்வாழ்வியல்

46. துயி லொழித்தல்

  1. உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம்.
உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும்.
  1. அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில்.
அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும்.
  1. சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும்.
கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.
  1. கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும்.
கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும்
455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம்.
அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்.
  1. அயர்விற் கமையு மைம்மூன்று நாழிகை.
களைப்பினை நீக்க ஆறுமணி நேரத்தூக்கம் போதுமானது ஆகும்.
  1. மற்றைய பொழுதெலா மாண்டொழில் புரிக.
விழித்திருக்கும் நேரத்தில் சிறப்பான தொழில் செய்திடல் வேண்டும்.
  1. தொழில்செயும் பொழுது துயில்வரி னுலாவுக;
தொழில் செய்யும் பொழுது துயில் வந்தால் உலாவுதல்;
  1. கைத்தொழின் முதலிய மெய்த்தொழில் செய்க;
மேலும் கைத்தொழில் போன்ற உடலைப் பயன்படுத்திச் செய்யும் தொழில்களைச் செய்தல்;
  1. அவசிய மெனினுண வரையினுஞ் சுருக்குக.
மேலும் அதிக உறக்கம் வந்தால் உணவின் அளவைக் குறைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue