Skip to main content

தாயே, தமிழே! – தாராபாரதி

தாயே, தமிழே!


நினைவாலும் கனவாலும்
எனையாளும் தமிழ் மகளே!
திணைமாவைவிட இனிக்கும்
தேமாவும் புளிமாவும்
பனையோலை யில்கண்டு
பதநீர் குடித்தவளே!
உயிரே! மெய்யே!
உயிர்மெய்யாய் இருப்பவளே!
தமிழே, உனக்கு
உயிர் – மெய்யாய் இருக்கிறதா?
குற்றுயிராய்க் கிடப்பவளே
ஊசலாடும்
குறையுயிரில் வாழ்பவளே
சிற்றுயிரைத் தந்துன்னை
எழுப்புதற்கு
சிலிர்த்திருக்கும் உன் மக்கள்
சிறுத்தைக் கூட்டம்!
– கவிஞர் தாராபாரதி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue