Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் விலக்கல்





 மெய்யறம்
இல்வாழ்வியல்
39. சிற்றினம் விலக்கல்

  1. சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்;
சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்;
  1. பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்;
தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்;
  1. அற்பத் தன்மை யளாவிய மாக்கள்;
சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்;
  1. பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்;
ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்;
  1. சுயநயங் கருதும் பயனிலா மாக்கள்.
தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர்.
  1. சிற்றினம் பொருளையுஞ் சீரையு மழிக்கும்;
சிற்றினம் ஒருவன் அடைந்த செல்வத்தையும் பெருமையையும் அழிக்கும்;
  1. அற்றமுங் குற்றமு முற்றிடச் செய்யும்;
மேலும் அச்சத்தையும் குற்றத்தையும் ஏற்படுத்தும்;
  1. முற்றவ நலத்தொடு கற்றவுஞ் சிதைக்கும்;
மேலும் ஒருவர் தனது மேன்மையான நடத்தையினால் அடைந்த பெருமைகளையும் அவர் கற்றதனால் அடைந்த அறிவினையும் அழிக்கும்;
  1. நரகும் பழியு நண்ணிடச் செய்யும்.
மேலும் மற்றவர் நம்மை இகழுமாறு செய்து நரகத்தில் விழவைக்கும்.
  1. சிற்றினப் பற்றினைச் சிறிதும் வேண்டேல். ஆதலால் சிற்றினத்தின் மீதான விருப்பத்தை அறவே நீக்குதல் வேண்டும்.
– வ.உ.சிதம்பரனார்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue