Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) : பரத்தனை விலக்கல்




தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்
இல்வாழ்வியல்

38. பரத்தனை விலக்கல்


  1. தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன்.
தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன்.
  1. பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்
அவன் பரத்தையை விடத் தீயவன்.
  1. பொதுமக ளாதலம் முழுமக னாலே.
அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள்.
374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே.
அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான்.
375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே.
அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன.
  1. அவனைக் காண்டலா லழியும் புகழே.
அவனைப் பார்ப்பவர்களின் புகழ் அழியும்.
  1. அவனொடு பேசலா லழியு நிறையே.
அவனோடு பேசுபவர்களின் கற்பு அழியும்.
378.அவனொடு சேர்தலா லழியு மனைத்தும்.
அவனோடு சேர்பவர்கள் அனைத்தையும் இழப்பர்.
  1. அவனிலா நாடே யாகுநன் னாடு.
அவன் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.
  1. அறனு மளியு மமைவுறு நாடு;
அறமும் அன்பும் நிறைந்த நாடாக விளங்கும்.
– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue