Posts

Showing posts from November, 2016

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

Image
அகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016 இலக்குவனார் திருவள்ளுவன்      27 நவம்பர் 2016       கருத்திற்காக.. மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 1/6 “இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும் தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய் வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல் வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்” எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே                          …5 “அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்; பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்; முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில் ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்!                        …10 கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை; உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்; செல்வரை நாடின் சினந்து துரத்துவர்; மேடையில் அழகாய் விரிவுரை ஆற்றிடும் மாந்தரை வேண்டின் மதிப்பதும் செய்திலர்.                         …15 பிறர்க்கென வாழ்வதாய்ப் பேசிடும் அவர்கள் கையை விரித்து மெய்ந்நடுக் குற்று இல்லை என்றே ஏசிக் கடிந்தனர். இரக்க நினைந்தே எவரிடம் செல்லினும் ஏச்சும

ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்

Image
அகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016 இலக்குவனார் திருவள்ளுவன்      27 நவம்பர் 2016       கருத்திற்காக.. ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! ஒளியாய் நீயே இருளைக் கிழித்து கதிராய் எழுந்து வெளியே வருவாய்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! [15.10.2016, சனிக்கிழமை அன்று, தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் (மியான்மா), இனிய நந்தவனம் அறக்கட்டளை (தமிழ்நாடு) இணைந்து யாங்கோன் ஓர்ச்சிட்டு உணவகத்தில் நிகழ்த்திய இலக்கியப் பெருவிழாவில் பாடிய கவிதை வரிகள்]

அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை

Image
அகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016 இலக்குவனார் திருவள்ளுவன்      27 நவம்பர் 2016       கருத்திற்காக.. அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன சத்திரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம் அக்கினி மதுரைச் சிலம்பின் சீற்றம்! இனியவை கூறி இடர்தீர்த்தல் அறம் ஈதல் இசைபட வாழ்தல் அறம் இல்வாழ்வை இயல்பொடு அமைத்தல் அறம் எதிர்பார்ப் பில்லாக் கடமையே அறம்! இம்மையும் மறுமையும் ஈடின்றி வாழ இன்னாப் பிறப்பை இனியதாய் மாற்றும் பேரின்பம் அளிக்கும் பெரும்புகழ் சேர்க்கு மறம். ஆதலால் மனமே! அறம் செய விரும்பு! [15.10.2016, சனிக்கிழமை அன்று, தமிழ்க்