பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி




பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி

தலைப்பு-பொய்தீர்ஒழுக்கம்-தி.வே.விசயலட்சுமி ; thalaippu_neritrhandhaay_vahzi_thi.ve.visayalatchumi

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10


  1. நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும்
வயங்கண்டு கற்போம் விழைந்து.

  1. குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள்,
திறனை அறிவோம் தெளிந்து.

  1. போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே
சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு.

  1. குறள்நெறி பேணின் குறையா வளங்கள்
திறம்படப் பெறுவோம் தேர்ந்து.

  1. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால்
வெல்வோம் விதிப்பயனை நாம்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
-புலவர் தி.வே.விசயலட்சுமி
தி.வே.விசயலட்சுமி/ விசயலக்குமி : thi.ve.visayalatsumi_visayalakkumi

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue