Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை





வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 

– 1.27. ஒழுக்க முடைமை


தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

27. ஒழுக்க முடைமை
  1. ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே.
ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும்.
  1. அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர்.
அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர்.
  1. அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல்.
பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும்.
  1. இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல்.
பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும்.
  1. நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்.
அவர்களது எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக விளங்கும்.
  1. மறநெறி விலக்கி யறநெறி செல்லல்.
அவர்கள் தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள்.
  1. தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல்.
அவர்கள் தான் பெறவேண்டும் என்று எண்ணுவதை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
  1. தன்னுயிர் போல மன்னுயிர்ப் பேணல்.
அவர்கள் தன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பார்கள்.
269.பகைசெய் தவரொடு நகைசெய் தளாவல்.
அவர்கள் பகைவர்களோடும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து பழகுவார்கள்.
  1. உயிரெலா மெய்யென வோர்ந்தவை யோம்பல்.
எல்லா உயிர்களும் இறைவனே என்று உணர்ந்து எல்லா உயிர்களுக்கும் மதிப்பு அளிப்பார்கள்.

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue