Posts

Showing posts from June, 2016

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி

Image
அகரமுதல 140, ஆனி12,2047 / சூன் 26,2016 வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி இலக்குவனார் திருவள்ளுவன்      26 சூன் 2016       கருத்திற்காக.. (வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 தொடர்ச்சி) 3   சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப் போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக் கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில், கருவுக்குக் கருவான சமாச்சாரத்தின் கார்காலங்கள் நிசப்தப்பட்டுக் கிடக்கிறது ! பாதம் சுமக்கும் பாதரட்சைகளின் பரதேசி வாழ்வு போல  என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும் பெண்களின் மாதவிடாய்ச் சிக்கலும் ஒன்று. இதுவரை பெண்கள் மட்டுமே பேசி வந்த இச்சிக்கலைக் கையில் எடுத்துள்ள முதல் ஆண் கவிஞர் இவராகத்தான் இருக்க முடியும். இந்தக் கவிஞரின் இந்தப் போக்கு பெண்கள் மீதான கரிசனையும் பெண்ணியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 – முனைவர். ப. பானுமதி

Image
அகரமுதல139,ஆனி 05, 2047 / சூன்19,2016 இலக்குவனார் திருவள்ளுவன்      19 சூன் 2016       கருத்திற்காக.. (வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3  தொடர்ச்சி) 2    ஈழத் தமிழர்களின் மரணம் இவரது மனத்தைப் பல்லாயிரச்சுக்கலாக உடைத்துப் போட்டுள்ளது. அந்த உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாகக் கண்ணீர் சிந்துகின்றன. மரணம் பேசியதைப் போலவே இவரது கவிதைகளில் மயான பூமியும் பேசுகிறது. மனிதனின் மரணத்தைத் தன் மடியில் தாங்குவது மயானம். அம்மயானமே, மனித எச்சங்களெல்லாம் மக்கிப் போனவுடன் தூது அனுப்புகிறேன் அதுவரை உங்கள் துப்பாக்கி முனையை குத்தகைக்கு விடுங்கள் குருவிகள் கூடு கட்டி குடும்பம் நடத்தட்டும் ! என்று படுகொலைகளின் சுமை தாங்காமல் விம்மி வெடிக்கிறது அன்வரின் கவிதையில். மானுடர்க்குக் கலவிதான் கவலையைத் தீர்க்கும் மாமருந்து. அதனால்தான், “ காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும் …. … …. … …. … ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே ” என்று காதல் செய்யத் தூண்டுவார் பாரதி.  நஞ்சுபோல ஏறி வரும

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்

Image
அகரமுதல139,ஆனி 05, 2047 / சூன்19,2016 இலக்குவனார் திருவள்ளுவன்      19 சூன் 2016       கருத்திற்காக.. (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில் அதுவும் களவு ஆகும். உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம். இந்த செயலுக்கான தண்டனை பொருளை இழந்தவர்களின் நிலைமையைப் பொறுத்து மாறுபடும். களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன். களவு செய்பவர்களும் மற்றவர்களிடம் களவுத் தொழில் இழிவானது என்றே கூறுவர். கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர். களவு செய்பவர்கள், தங்களுடைய களவினைத் தட