Skip to main content

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தலைப்பு-நௌவிய ஆட்சி, சச்சிதானந்தம் தெய்வசிகாமணி :thalaippu_navviya_aatchi_sahithanantham

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!


ஒவ்வொரு முறையும் இம்முறை யாவது,
செவ்விய நல்லாட்சி அமையும் என்றெண்ணி,
இங்கொரு முறையும் அங்கொரு முறையும்,
அவ்விய வாக்கினை அளித்து ஏமாந்து,
கவ்விய இருளில் கலங்கும் தமிழா!
செந்தமி ழுணர்வுடன் தமிழர் ஒன்றாகி,
ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து வாக்கினை,
இம்முறை சரியாய் அளித்தால் உடனே,
நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!
[நௌவிய = நவ்விய  = அழகிய]

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue