சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்





கழிக்கின்றோம் பழையவற்றைக் 
  
காணவாரீர் எனவழைத்தே
விழியெரிய நேயத்தை
  விளையன்பை எரியவைத்தே
கழிவென்றே மனிதத்தைக்
  கருகவைத்துக் கணியன்தன்
வழியடைத்துக் கொளுத்துகின்ற
  வன்முறையா போகியிங்கே !
சாதிமணி உலையிலிட்டுச்
  சதிவெறியாம் பாலையூற்றி
மோதிபகை வளர்வெல்லம்
  மொத்தமுமாய் அதிலிட்டு
வீதிகளில் குருதிவாடை
  
வீசிடவே மனக்குடத்தில்
ஆதிக்கம் பொங்வைத்தே
  ஆடுவதா பொங்கலிங்கே !
காடுகளில் உழைப்பவரை
  
கழனிசேற்றில் புரள்பவரை
ஆடுகளின் மந்தையாக
  
அடித்தட்டில் தாழ்ந்தவராய்
மாடுகளைப் போல்விரட்டி
  மனிதகுலம் தலைகுனிய
கேடுகளை விளைவிக்கும்
  கேளிக்கையா காணும்பொங்கல் !
தெருவெல்லாம் அன்பென்னும்
   தோரணங்கள் கட்டிவைப்போம்
கரும்புசுவை மனமேற்றிக்
  கனிவுததைக் தூவிடுவோம்
அரும்மஞ்சள் முகமொளிர
  அணைத்தொன்றாய்க் கூடிடுவோம்
உருவாகும் சமுத்துவத்தில்
  உயர்பொங்கல் பொங்கிடுவோம் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்
அகரமுதல 115, தை 01, 2047 / சனவரி 15, 2016
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue