Skip to main content

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்



எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 )
attai_ezhilarasi


நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து
                கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி
சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர்
“பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்”
  1. என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன்,
ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம்
பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர்
பொற்கா சுகளோ போற்றப் படுவன
ஆயிரம் என்றால் யார்மனந் திரியா?
  1. ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச்
சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ
“நன்று நன்று நல்குவீர் ” என்றனர்
வணிகரில் ஒருவனை வல்விலங் கவிழ்த்து
நிதியறை சென்றுநேர்ந்தவை பெற்றனர்
  1. பின்னர் அவர்கள் பேணிய பொருளில்
அவர்கட் குரியதை இவர்கள் அளித்து
“முடியாத் துயரால் மூவரும் மாய்ந்தோம்”
என்றபொய் நறுக்கும் இயல்புடன் பெற்று,
வணிகர் மூவரும் மாற்றுருவுடனே,
  1. அயல்நா டேக அண்மையி னின்ற
கப்பலிற் செல்லச் செப்பஞ் செய்து
மீண்டனர் மன்றம் மேவிய அறவனை
வணங்கி “ஐயா! வணிகர் மூவரும்
இடுக்கணுக் கஞ்சி இறந்தொழிந் தனரால்
515         என்பதை யறிந்தோம் இச்சிறு சீட்டால்
இறைவ அறிக” என்றே காட்டினர்
உள்ளம் பூரித் துடனே யவர்களை
வெளியே அனுப்பினன்; விரைந்து அரசியை
அடைந்து சீட்டை அன்புடன் காட்டி,14
  1. “அல்லவை செய்தார்க் கறமே கூற்றம்
என்பதற் கிலக்காய் இறந்து போயினர்.
நின் பொருள் விரும்பி நின்னைக் கெடுக்க
எண்ணிய மூத்தோர் நண்ணினர் கேட்டை;
கெடுவான் கேடு நினைப்பான் அன்றே;
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue