Skip to main content

தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்


தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்

தலைப்பு-தமிழுறுதி : thalaippu_thamizhuruthi

எண்ணுறும் போது தமிழையே  யெண்ணீர்
இசைத்துழி தமிழையே  யிசைப்பீர்
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
பழுதறப் பண்ணியின் புறுவீர்
உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும்
உயிருளந் துடித்திடும் போதும்
பண்ணினு மரிய தமிழையே  கருதிக்
காரிய வுறுதி கொண் டெழுவீர் !
கவியோகி சுத்தானந்த பாரதியார்


Comments

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue