Skip to main content

கவிதைக்கு அழிவில்லை! – -முனைவர் இராம.குருநாதன்

Jpeg

சீறிப் பாய்வேன் தமிழாலே!

காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என்
கவிதைக் கனலுக் கழிவில்லை
ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி
உறைக்குள் போட மனமில்லை
மண்ணும் மலையும் சரிந்தாலும் – என்
மானிடப் பார்வைக் கழிவில்லை
விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள்
விரியும் கவிதைக் கழிவில்லை
வெட்டிப் பொழுது போக்குவதை – நான்
வீணாய் என்றும் கழித்ததில்லை
கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும்
கூர்மை வாளாய் க் களமிறங்கும்
சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள்
தொடரும் சமூகச் சிந்தனைகள்
வெல்லும் என்கவி எனச்சொல்லி – நான்
வித்தகம் பேச வரவில்லை
அல்லும் பகலும் கண்டவற்றை – என்
அகத்தின் காயமாய் உணர்ந்ததனால்
செல்லும் வழியைச் சீராக்க – நான்
சீறிப் பாய்வேன் தமிழாலே!
(1968)
-முனைவர் இராம.குருநாதன்
இராம.குருநாதன் கவிதைகள்
பக்கம் 21



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue