எழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவனார்
எண்ணினர் தனியே யிருப்பதா யோர்நாள்
- காதலின் கையிற் கருவிய ராகி
தென்றல் தவழ்ந்து தேனுறு மலரினும்
- முத்த மளித்து முகமலர் கொண்டே
எழிலர சிக்கோ ரின்ப முத்தம்
ஆடலன் விரும்பி அன்பி னளித்தான்.
காதல் கைமிகக் கருத்தழிந் தவளும்
- நிரைவளை முன்கை விரைவி னீட்டி
“ நின்மார் படைதலின்இன்பமு மின்று ”
நன்றே வாழ்க என்றவள் கூறினள்
எழுதோவியமா யிருக்கு மெல்லை
- மூவரில் மூத்தோன் முடுக்கென வந்து
வியப்பும் வெறுப்பும் திகைப்புடன் கொண்டனன்
தலைவரின் றங்கை தாழ்குல முடைய
ஆளை மணந்து அன்பாய் வாழ
- எண்ணிய துணிவை யெண்ணிக் கோபங்
அவ்விடங் கடந்தன னறியா தவன்போல்!
- உற்றதை நவின்றனர்; உணர்விழந் தனரே !
பொட்டெனச் சாய்ந்தனர்; திட்டென எழுந்து
அடிமை யொருவனை யன்பாய் மணந்து
பிரிய நினையாப் பெருஞ் செல்வத்தால்
- கனவா னாக்குங் கருத்தை யுள்ளி
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
Comments
Post a Comment