Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ. அரங்கராசன்

attai-kuralarusolurai

02. பொருள் இயல்
11. நட்பு இயல்     
அதிகாரம் 080. நட்பு ஆராய்தல்

வாழ்க்கை முழுதும் கூடவரும்
ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல்.

  1. நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின்,    
   வீ(டு)இல்லை, நட்(பு)ஆள் பவர்க்கு.

       ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில்,
         நட்புக்குப்பின் விடுபடல் கடினம்.


  ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,
    தான்சாம் துயரம் தரும்.  
         ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு,
         இறுதியில் சாவுத் துன்பம்தான்.

  1. குணனும், குடிமையும், குற்றமும், குன்றா
     இனனும், அறிந்(து)யாக்க நட்பு.

       நல்பண்பு, குடிப்பிறப்பு, குற்றம்,
       நிறைஇனம், ஆராய்ந்து நட்புகொள்.

  1. குடிப்பிறந்து, தன்கண் பழிநாணு வானைக்,
   கொடுத்தும், கொளல்வேண்டும் நட்பு.    

       நல்குடிப் பிறந்து, பழிநாணுவானை,
       எதுகொடுத்தும், நண்பன் ஆக்கு.

  1. அழச்சொல்லி, அல்ல(து) இடித்து, வழக்(கு)அறிய
   வல்லார்,நட்(பு) ஆய்ந்து கொளல்.

       கண்ணீர்விட்டுச் சொல்லியோ, கண்டித்தோ,
       வழிகாட்டுவானை நண்பன் ஆக்கு,    

  1. கேட்டினும், உண்(டு)ஓர் உறுதி; கிளைஞரை,
   நீட்டி அளப்ப(து)ஓர் கோல்.  

     கெடுதியிலும் உண்டாகும் நன்மை,
       நண்பரை அளந்துகாட்டும் அளவுகோல்.


  1. ஊதியம் என்ப(து), ஒருவற்குப் பேதையார்
   கேண்மை ஒரீஇ விடல்.
     
         அறிவுஇலார் நட்பைக் கைவிடலே,
      ஒருவனுக்கு நன்மையைத் தரும்.

  1. உள்ளற்க, உள்ளம் குறுகுவ; கொள்ளற்க,
   அல்லல்கண் ஆற்(று)அறுப்பார் நட்பு.

       குறுகியதை உள்ளாதே; துன்பத்தில்
       கைவிடுவார் நட்பைக், கொள்ளாதே.

  1. கெடும்காலை கைவிடுவார் கேண்மை, அடும்காலை
     உள்ளினும் உள்ளம் சுடும்.

       கெடுதியில் கைவிடும் தீநட்பு,
         சாகும்போது நினைத்தாலும் சுடும்.

  1. மருவுக, மா(சு)அற்றார் கேண்மை; ஒன்(று)ஈத்தும்
   ஒருவுக, ஒப்(பு)இலார் நட்பு.

          வேண்டியது கொடுத்துத் தூயநட்பை
         ஆக்கு; தீயநட்பை நீக்கு;
பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue