Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்


(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி)

attai-kuralarusolurai

02. பொருள் பால்
10. படை இயல்    
அதிகாரம்  077. படை மாட்சி

நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான
வீரப்படையின் சீரும், சிறப்பும்.

  1. உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன்
   வெறுக்கையுள் எல்லாம் தலை.
                      
       பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே,
       ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம்.
  1. உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும்,
   தொல்படைக்(கு) அல்லால் அரிது.

அழிவிலும் அஞ்சாப் பெருவீரம்,
பயிற்சிப் பழம்படைக்கே எளிது.

  1. ஒலித்தக்கால் என்ஆம் உவரி..? எலிப்பகை,
   நாகம் உயிர்ப்பக் கெடும்.

        பாம்பு மூச்சுவிட்டால், மாக்கடல்போல்
       ஒலிக்கும் எலிக்கூட்டம் என்ஆகும்..?

  1. அழி(வு)இன்(று), அறைபோகா(து) ஆகி, வழிவந்த
   வன்கண் அதுவே படை.

       அழியாத, வஞ்சத்துக்கும் ஆள்ஆகாத,
       வழிவழி வீரத்தது படை.

  1. கூற்(று)உடன்று, மேல்வரினும், கூடி எதிர்நிற்கும்
   ஆற்றல், அதுவே படை.              

       எமனே எதிர்த்தாலும், ஒன்றுகூடி
       எதிர்க்கும் திறத்தது வெல்படை.

  1. மற,மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்
   என, நான்கே ஏமம் படைக்கு.
                       
       வீரம், மானம், பெருமிதநடை,
       தெளிவு, படைக்குப் பாதுகாப்பு.

  1. தார்தாங்கிச் செல்வது தானை, தலைவந்த
   போர்தாங்கும் தன்மை அறிந்து.

எதிர்வரும் படையை, போரைத்
தடுத்து முன்செல்வது திறப்படை.

  1. அடல்தகையும், ஆற்றலும் இல்எனினும், தானை,
   படைத்தகையால் பாடு பெறும்.

       போர்த்தகுதி, எதிர்ப்புத்திறன் இல்லாத
       படையும், தோற்றத்தால் வெல்லும்.

  1. சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும்,
   இல்ஆயின் வெல்லும் படை.
                       
         சிறுமதியும், வெறுப்பும், வறுமையும்,
       இல்ஆயின், வெல்லும்  நல்படை.

  1. நிலைமக்கள் சால உடைத்(து)எனினும், தானை,
   தலைமக்கள் இல்வழி இல்.    
        படைவீரர் இருந்தாலும், படைக்குத்
தலைவர் இல்எனின், படைஇல்லை.
பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue