Posts

Showing posts from November, 2015

சிற்பியின் கல்லும் கடவுளும்! – காளிதாசு

Image
சிற்பியின் கல்லும் கடவுளும்! – காளிதாசு இலக்குவனார் திருவள்ளுவன்      29 நவம்பர் 2015       கருத்திற்காக.. சிந்தி! காளிதாசு (அகரமுதல108   கார்த்திகை13 , 2046 / நவ.29, 2015)

துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      22 நவம்பர் 2015       கருத்திற்காக..   துணிவு     துணிந்தவனுக்குக் கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்… துணிந்தவனுக்கு தலையெழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான் துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம் மரணம்.. தவற்றைக் களையெடு சேமிப்பை விதைபோடு நீயும் துணிந்தவன்தான் வாழ்க்கையென்னும் பக்கத்தில் துணிந்தவன் வீழ்ந்தாலும் எழுவான்.. துணிவு இழந்தவன் எழுந்து எழுந்து வீழ்ந்துகிடப்பான்.. அகக்கண் திறங்கள் துணிவு பிறக்கும் புறக்கண் துறந்துவிடுங்கள்.. ஆக்கம் பிறக்கும்.. ஏன் என்ற கேள்வி பிறக்காவிடில் பிறக்காமலேயே இறந்துவிடுகிறது துணிவு! துணிவு தூரத்துச் சொந்தம் இல்லை.. உன் அருகில் வைத்துக்கொள்.. துணிந்து செல்.. நிமிர்ந்து நில்.. வெற்றியின் மறைபொருள் துணிவில்தான் பிறக்கும்! துணிவில்தான் பிறக்கும்! என்றும் அன்புடன்   இரா. ந. செயராம

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      22 நவம்பர் 2015       கருத்திற்காக.. திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள்   இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம்.   இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி  வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல தொகுதிகள் கதைமாந்தர், இலக்கியத்தன்மை என வெளியிட்டார். குமரேசா! என விளித்து ஆடுஉ முன்னிலை அமைத்து, திருக்குறள் ஆய்வினை, கதை, ஒப்பீடு என உரையாக அமைத்து, ஒரு நேரிசை வெண்பாவினைப் பிற்பகுதியில் குறளுடன் அமைத்து முற்பகுதியில் கதையினைச் சுருக்கி ஈரடிகளில் அமைத்து ‘திருக்குறள் குமரேச வெண்பா’ என மீட்டுருவாக்க இலக்கியம் படைத்த பேரறிஞர் செகவீரபாண்டியனார் எனலாம். அறத்துப்பால் 800, பொருட்பால் 800 என