பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி

thanimaramum_thoappum

நான்  

நான்
என்ற சொல்
நாவினில் விதைக்காதீர் !
நாம்
என்ற சொல்
நாவினில் விதையுங்கள் !
நான் என்ற பாரம்
தலைக்கு ஏற்றினால்
வீழ்வது
நாம் இல்லை
‘நீ’ என்பதை உலகம்
இன்னும் உணரவில்லை !
நான் என்ற சொல்
உதட்டைப் பிரிக்கும்
பகைக்காரன் !
நாம் என்ற சொல்
உதட்டை இணைக்கும்
ஒற்றுமைக்காரன் !
நான் என்றால்
மனிதர்களின்
ஆங்காரம்!
நாம் என்றால்
மனிதன் அறிவின்
அலங்காரம்
நான் என்றால்
உள்ளத்தின் அடையாளம் !
நாம்  என்றால்
ஒற்றுமையின்
சின்னம் !
நான் என்றால்
இமைகள் கூட
பிரிந்து இருக்கும்  !
நாம் என்றால்
இமைகளும் அழகாய்
உறங்கும் !
நான் அடையாளம்
மனிதன் பிரிந்து கிடக்கிறான்
நாம் என்ற
அடையாளம்தான்
பட்சிகளின் ஒற்றுமையின்
சிகரமாய் விளங்குகிறது .
நான்  என்றால்
இல்லறம் கசக்கும் .
நாம் என்றால்
இல்லறம் இனிக்கும் .
நான் என்ற சொல்
குத்துப்பட்டு கிடக்கும்.
நாம் என்ற சொல்
அரவணைத்துக்கொண்டே
இருக்கும் .
நான் என்றால்
ஆலமரம் கூட வீழ்ந்திருக்கும் .
நாம் என்றதனால்தான்
மரம் செடி கொடி காய் கனி எனப்
பயிர் பெருகுகிறது.

-இரா.ந.செயராமன் ஆனந்தி 
கீழப்பெரம்பலூர் 
தரவு : முதுவை இதாயத்து

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue