பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் இலக்குவனார் திருவள்ளுவன் 20 ஏப்பிரல் 2014 கருத்திற்காக.. புரட்சிக் கவிஞர் என்ற பெருஞ் சிறப்புக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாழ்ந்துபோன தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகப் பவனி வந்தார். பழமைச் சமுதாயத்தைப் பாட்டால் பண்படுத்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அடிமை வாழ்வினரை புரிய உலகு நோக்கி விரைந்துவர அழைத்தார். அவல வாழ்வினருக்கும் அஞ்சாமைத் திறன் ஊட்டினார். “ இருட்டறையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே – வெருட்டுவது பகுத்தறிவு இலையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும் ” என்று குரல் கொடுத்தபிறகுதான் மருட்டுகின்ற மதத் தலைவரை விரட்டுகின்ற வீரமெல்லாம் தமிழ் மக்களுக்கு வந்தது. பாரதிதாசன்! இந்தப் பெயர் தமிழர் தம் நெஞ்சத்தில் இடம் பெற்ற காலம் (18.8.39) முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் கிளர்ந்தெழுந்த நேரம்! “இந்தி எப்பக்கம் வந்து புகுந்துவிடும் எத்தனை பட்டாளம் கூட்டிவரும் தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம். பங்கம் விளைந்திடில் உங்கள் தாய்மொழிக்கே பச்சை இரத்தம் ப
Comments
Post a Comment