Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்


attai_kuralarusolurai03

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 049. காலம் அறிதல்


செய்யத் துணிந்த செயலுக்குப்
பொருந்தும் காலத்தை ஆராய்தல்

  1. பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
     வேந்தர்க்கு, வேண்டும் பொழுது.
    காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்;
       ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை.

  1. பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத்,
      தீராமை ஆர்க்கும் கயிறு.

      காலத்தோடு பொருந்திய  செயற்பாடு,
        செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு..

  1. அருவினை என்ப உளவோ….? கருவியான்,
      காலம் அறிந்து செயின்.

   தகுகருவிகளோடு காலம் ஆய்ந்து,
        செய்தால், முடியாதும் உண்டோ?

  1. ஞாலம் கருதினும், கைகூடும், காலம்
      கருதி, இடத்தால் செயின்.

    காலத்தை, இடத்தை ஆராய்ந்து
        செய்வார்க்கு, உலகமே கிடைக்கும்.

  1. காலம் கருதி இருப்பர், கலங்காது,
      ஞாலம் கருது பவர்.

      உலகை வெல்லக் கருதுவார்.
        கலங்கார்; காலத்தை ஆராய்வார்.

  1. ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர்,
     தாக்கற்குப் பேரும் தகைத்து.

     ஊக்கத்தான் ஒடுங்குதல், சண்டைக்கடா,
       பாயும்முன் பதுங்குதல் போலஆம்.

  1. பொள்என ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்(து),
      உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

      அறிவாளர் வெளிப்படக் காட்டிக்
        கொள்ளார்; காலத்தை எதிர்பார்ப்பார்.

  1. செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
      காணின், கிழக்(கு)ஆம் தலை.

பகைவரைக் கண்டால், பணிக;
       காலம் கனிந்தால், நிலைதலைகீழ்.

  1. எய்தற்(கு) அரிய(து), இயைந்தக்கால், அந்நிலையே,
      செய்தற்(கு) அரிய செயல்.

 அரிய நல்காலம் பொருந்தினால்,
       செய்ய வேண்டியதைச் செய்துவிடு.

  1. கொக்(கு)ஒக்க, கூம்பும் பருவத்து, மற்(று)அதன்,
      குத்(து)ஒக்க, சீர்த்த இடத்து.

 ஏற்றமீன் வந்தவுடன், குத்திஎடுக்கும்
        கொக்குப்போல், காலத்தே செய்க.

பேராசிரியர் வெ. அரங்கராசன்
ve.arangarasan04
(அதிகாரம் 050. இடன் அறிதல்)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue