Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்


arusolcurai_attai+arangarasan
 01. அறத்துப் பால்
03. துறவற இயல்
அதிகாரம் 037. அவா அறுத்தல் 
பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,
   முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.

  1. அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,
     தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.

   தொடரும் பேராசைதான், எல்லா
       உயிர்களின் பிறப்புகட்கும் விதை.

  1. வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,
     வேண்டாமை வேண்ட வரும்.

       விரும்பின், பிறவாமையை விரும்பு;
       விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.

  1. வேண்டாமை அன்ன விழுச்செல்வம், ஈண்(டு)இல்லை;
     யாண்டும், அஃ(து)ஒப்ப(து) இல்.

       எதையும் விரும்பாமையே, ஒப்புமை
       இல்லாத மிகச்சிறந்த செல்வம்
.
  1. தூஉய்மை என்ப(து), அவாஇன்மை; மற்(று)அது,
     வாஅய்மை வேண்ட வரும்.

  பேராசை இல்லாமையே, மனத்தூய்மை;
       வாய்மையால்தான் அதுவும் வாய்க்கும்.

  1. அற்றவர் என்பார், அவாஅற்றார்; மற்றையார்,
     அற்றாக அற்ற(து) இலர்.

       பேராசை இல்லாரே, துன்பம்இல்லார்;
       மற்றையார் துன்பம்உள்ளார் ஆவார்.

  1. அஞ்சுவ(து), ஓரும் அறனே; ஒருவனை
     வஞ்சிப்ப(து), ஓரும் பழி.

  யாரையும், ஏய்த்துவிடும் பேராசைக்[கு]
       அஞ்சுதல் அறம்ஆம். ஆராய்க.

  1. அவாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை,
     தான்வேண்டும் ஆற்றான் வரும்.

       பேராசை முழுவதையும் போக்கின்,
       விரும்பும் நல்செயல்கள் வந்துசேரும்.

  1. அவாஇல்லார்க்(கு), இல்ஆகும் துன்பம்; அஃ(து)உண்டேல்,
     தவாஅது மேன்மேல் வரும்.

       பேராசை இல்லாதார்க்கே, பேரின்பம்;
       உள்ளார்க்கோ, மேன்மேலும் துன்பம்.

  1. இன்பம் இடையறா(து) ஈண்டும், அவாஎன்னும்,
     துன்பத்துள் துன்பம் கெடின்.

       துன்பத்துள் பெரும்துன்பம் பேராசை
       கெட்டால், இன்பத்துள் பெரும்இன்பமே.

  1. ஆரா இயற்கை அவாநீப்பின், அந்நிலையே,
     பேரா இயற்கை தரும்.

   நிறையாத பேராசையின் நீக்கம்,  
       பெயராத இன்பத்தின் ஆக்கம்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue