வியத்தகு மில்லறம் – பரிதிமாற்கலைஞர்

attai-thanipaasurathokuthi 
வியத்தகு மில்லறம்
விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம்
ஒழுக்க வியலறி வறுத்துஞ் சாலையாய்
நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி
மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே
ரன்பு காய்த்துநல் லருள்கனிந் தலகிலா
இன்பநறை பிலிற்று மினியகற் பகமாப்
இலகிடு முண்மை மலையிலக் கன்றே
ஏத்துறுந் தகைய இல்லற மெனுமிம்
மாத்துடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ்
செலுத்தபு துன்பந் தீயரை யெறிந்து
தொலைத்திட லறியார் துறவு துறவென
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
மயக்கினு மாழ்கலீல் மாந்தர்கள்!
உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினோ,
– – பரிதிமாற்கலைஞர் : தனிப்பாசுரத்தொகை
அகரமுதல 91 ஆடி 24, 2046 / ஆக.09, 2015
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue