திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை
இலக்குவனார் திருவள்ளுவன் 30 August 2015 No Comment (அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 032. இன்னா செய்யாமை என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை . சிறப் ( பு ) ஈனும் , செல்வம் பெறினும் , பிறர்க் ( கு ) இன்னா செய்யாமை , மா ( சு ) அற்றார் கோள் . சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக , எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே . கறுத் ( து ), இன்னா செய்தவக் கண்ணும் , மறுத் ( து ), இன்னா செய்யாமை , மா ( சு ) அற்றார் கோள் . துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத் தராமையே தூயார்தம் கொள்கை . செய்யாமல் , செற்றார்க்கும் , இன்னாத செய்தபின் , உய்யா விழுமம் தரும் . பகைக்காத போதும் பகைத்தாரைத் துன்புறுத்தின் துன்பம்தான் வரும் . இன்னாசெய் தாரை ஒறுத்தல் , அவர்நாண , நல்நயம் செய்து விடல் . கொடுமை செய்தார்க்கும் தண்டனை , அவர்வெட்கும்படி நன்மை செய்