திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்
(அதிகாரம் 008. அன்பு உடைமை தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02. இல்லற இயல்
அதிகாரம் 009. விருந்து ஓம்பல்
உறுபசியுடன் வருகின்ற எவருக்கும்,
விருந்து படைத்தலும் உதவுதலும்.
- இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி,
இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும்,
நல்உதவி செய்யவுமே ஆகும்.
- விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா
விருந்தாளர் வெளியில்; சாவினை
நீக்கும் மருந்[து]எனினும் அருந்தாதே.
- வருவிருந்து, வைகலும், ஓம்புவான் வாழ்க்கை,
நாள்தோறும் விருந்து தருவார்தம்
வாழ்வு, துன்பப்படாது; பாழ்படாது.
- அகன்அமர்ந்து, செய்யாள் உறையும், முகன்அமர்ந்து,
முகம்மலர விருந்து தருவார்
வீட்டில், திருமகள் தங்குவாள்.
- வித்தும், இடல்வேண்டும் கொல்லோ….? விருந்(து)ஓம்பி,
விருந்தின்பின் மீதியை உண்பார்,
விதைநெல்லையும், விருந்துக்கே ஆக்குவார்.
- செல்விருந்(து) ஓம்பி, வருவிருந்து பார்த்(து)இருப்பான்,
செல்வார்க்கும், வருவார்க்கும் விருந்து
நல்குவார் வானோர்க்கு நல்விருந்து.
- இனைத்துணைத்(து), என்ப(து)ஒன்(று) இல்லை, விருந்தின்
விருந்தின் நல்பயன், விருந்தாளர்தம்
பெரும்பண்பைப் பொறுத்தே இருக்கும்.
- “பரிந்(து)ஓம்பிப் பற்(று)அற்றேம்” என்பர், விருந்(து)ஓம்பி,
விருந்து தந்து மகிழாதார்
உறவுகளை இழந்து வருந்துவார்.
- உடைமையுள் இன்மை, விருந்(து)ஓம்பல் ஓம்பா
செல்வத்தில் வறுமை, விருந்துதரா
மடமை; அறியாரிடமே உண்டு.
- மோப்பக், குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
முகர அனிச்சப்பூவும், முகம்திரிந்து
பார்க்க விருந்தும், வாடும்.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 010. இனியவை கூறல்
Comments
Post a Comment