திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்

         arangarasan_thirukkural_arusolurai_attai

001 அறத்துப் பால்       

01 பாயிர இயல்

அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்
         
          ‘சிந்தனையும், சொல்லும், செயலும்         
தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்

  1. சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)
     ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?

      சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,
        வளமும் நலமும் வே[று]இல்லை.

  1. அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,
      மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.

     அறத்தைவிட, நல்லதும், அதனை
        மறத்தலைவிடக், கெட்டதும், இல்லை.

  1. ஒல்லும் வகையான், அறவினை ஓவாதே,
      செல்லும் வாய்எல்லாம் செயல்.

     இயன்ற வகையில், அறச்செயல்களை,
        இடைவிடாது, எங்கும் செய்க.

  1. மனத்துக்கண் மா(சு)இலன் ஆதல், அனைத்(து)அறன்;
     ஆகுல நீர பிற.

     மனத்துள் எவ்அழுக்கும் இல்லாமை
        அறம்ஆம்; மற்றவை வெளிப்பகட்டு.

  1. அழுக்கா(று), அவா,வெகுளி, இன்னாச்சொல், நான்கும்,
      இழுக்கா இயன்ற(து) அறம்.

     பொறாமையும், பேராசையும், சீற்றமும்,
        கடுஞ்சொல்லும் இல்லாமையே, அறம்.

  1. “அன்(று)அறிவாம்” என்னா(து), அறம்செய்க; மற்(று),அது,
      பொன்றும்கால், பொன்றாத் துணை.

     “பின்னர்ச் செய்வோம் என்[று]எண்ணாது,
         செய்அறமே, அழியாத் துணைஆம்.

  1.   “அறத்(து)ஆ(று) இது”என வேண்டா, சிவிகை
      பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை.

பல்லக்குப் பயணி, சுமப்போர்
        கண்டு, அறநெறியை மதிப்பிடாதே.

  1. வீழ்நாள் படாமைநன்(று) ஆற்றின், அஃ(து)ஒருவன்,
      வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

      நாள்தோறும் செய்அறம், துன்பங்கள்
        வருவழிகளை அடைக்கும் கல்.

  1. அறத்தான் வருவதே இன்பம்;மற்(று) எல்லாம்
      புறத்த; புகழும் இல.

     அறத்தினால் வருவதே, இன்பம்;
   பிறஎலாம், துன்பம்; புகழுமில்லை.

  1. செயல்பால(து), ஓரும் அறனே; ஒருவற்(கு),
      உயல்பால(து), ஓரும் பழி.
           செய்யத் தக்கது அறமே;
         செய்யாது விடத்தக்கது பழியே.

– பேராசிரியர்வெ. அரங்கராசன்



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue