Skip to main content

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

kuruvigal

காட்சி – 28

அங்கம்    :     அன்பரசன், கவிஞர்
இடம்      :     குடிலின் முன்வாசல்
நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க்
கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க
இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட
அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்)
கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை!
சொல்லால் சொல்ல வழியும் உண்டா?
அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே
வருவோரை நாம் தான் செய்வது என்ன?
கவி  :     திருடனாய்ப் பார்த்து திருந்திட வேண்டும்; கயவர்
திருந்தாதபோது திருத்திட வேண்டும்! எந்த
நீதி நூல் பலவும் நெறிநூல் பலவும்! சந்து
வீதிகள் பலவாய்த்! தொண்டர்கள் பலராய்! இங்கு
ஆயிரமாயிரம் தோன்றினால் கூட! பழைய
பாயிரம்போலப் பயனற்றுப் போகும்!

(காட்சி முடிவு)
(பாடும்)
– ஆ.வெ.முல்லை நிலவழகன்
mullainilavazhakan


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue