பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்


kurivigal82

காட்சி – 27

அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்
இடம்      :     அருண்மொழி இல்லம்
நிலைமை  :     (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண்
தாங்கா இன்பம் அடைகின்றான்)
அருண்    :     பணியாளும் வந்து பல நாழி ஆச்சு!
அணியவே இன்னும் நாழிதான் என்ன?
பூங்       :     முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்!
துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்!
அருண்    :     ஆகா! என்ன! தேவியே! தேவி!
ஓகோ! விண்மீன் வானுடை கட்ட!
எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்!
தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க!
தேவியே! கண்ணே! தேவியேதான்!
தாவியே அணைக்கத் தூண்டுதே முத்தே!
பூங் கோவில் நாம் செல்வோம்! இப்போ!
       இராவிலே பார்ப்போம்! தப்போ!

(காட்சி முடிவு) 
- பாடும்
 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
 அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue