போதை – மரு.பாலசுப்பிரமணியன்


adict
பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும்
போதையிலே கால் நடந்தால் காடு போய் சேரும்
பிணியாலும் நோயாலும் மாண்டவர் சில கோடி
புகையாலும் மதுவாலும் மாண்டவர் பல கோடி
புகழின் பாதை கோபுரத்துக்கு வழி காட்டும்
மதுவின் போதை புதை குழிக்கு வழி காட்டும்
போதை என்பது நமக்கு நாமே வைக்கும் கொள்ளி நெருப்பு
சோம்பல் என்பது நமக்கு நாமே கட்டும் கல்லறை
நெஞ்சினிலே துயரம் வந்ததென்று போதையில் மயங்காதே
நெஞ்சினிலே துணிவு வந்த பின்னே பாதையில் தயங்காதே
பாதையில் தள்ளாடும் படகுகள்
ஒழுங்காக வீடு போய்ச் சேர்வதில்லை
போதையில் தள்ளாடும் தலைகள்
புகழுடன் காடு போய்ச் சேர்வதில்லை
தாயார் வெறுத்திடவும் ஊரார் ஒதுக்கிடவும் வீழ்த்திடுமே கள் போதை
மாதர் துரத்திடவும் மாந்தர் தூற்றிடவும் தாழ்த்திடுமே காமப் போதை
கலையில்லாது கல்லும் உளியும் இருந்தால் மட்டும் சிலைவராது
கவலைதீராது களியும் கள்ளும் உண்டால் மட்டும் துயர் மாறாது
கள் கொண்ட போதை மயக்கத்திலே காமம் தலைக்கேறும்
புகழ் கொண்ட போதை மயக்கத்திலே கருவம் தலைக்கேறும்
நல்ல பழக்கங்களைப் பழகுவது கடினம்
கெட்ட பழக்கங்களை விடுவது மிகக்கடினம்
- அருத்தமுள்ள இனியமனம் : மனநல மருத்துவர் பாலசுப்பிரமணியன்
balasubramaniyam_mananalamaruthuvar02
https://arthamullainiyamanam.wordpress.com/2014/07/08/mm217%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88/

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue