Skip to main content

எல்லா நாளும் பொன்னாளே! – புலவர்மணி இரா.இளங்குமரன்

ira.ilankumaran01
ஞாயி றன்று பிறந்தவனே
நன்மை எல்லாம் அடைவாயே
திங்க ளன்று பிறந்தவனே
திறமை பலவும் பெறுவாயே
செவ்வாய் அன்று பிறந்தவனே
செல்வச் செழிப்பில் வாழ்வாயே
புதனாம் நாளில் பிறந்தவனே
புகழில் சிறந்து வாழ்வாயே
வியாழ னன்று பிறந்தவனே
விளங்கும் அறிவில் உயர்வாயே
வெள்ளி யன்று பிறந்தவனே
வெற்றி யாவும் பெறுவாயே
சனியாம் கிழமை பிறந்தவனே
சலியா உறுதி அடைவாயே
எந்த நாளில் பிறந்தாலும்
எந்தக் குறையும் வருவதில்லை.
எல்லாநாளும் நன்னாளே
எவர்க்கும் ஏற்ற பொன்னாளே
இயற்கை தந்த நாள்களிலே
எவரே குறைகள் காண்பதுவே.
- புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue