பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 18– ஆ.வெ.முல்லை நிலவழகன்

Jpeg

காட்சி – 18
(நாடகக் காட்சி – 6)
அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்
இடம்      :     பள்ளியறை
நிலைமை  :     (கூடலிலே இன்பம் திளைத்த மனமோ
தேடியே அதனை நினைக்கச் செய்ய
இன்ப நினைவினை அசையாய்ப் போட்டு
மென்று உதிர்க்கிறான் வெளியில் அதனை
அருண்    :      வெள்ளி ஒளிக் கிண்ணத்திலே
பாலின் சுவையிருக்க!
கள்ளியவள் கன்னத்திலே
கனியின் சாறிருக்க!
மதியென வந்தாள்!
மதியே நானென்று!
சதிரென மொழிந்தாள்
சதிரே நானென்று
நோக்கினேன் தாழ்த்தினாள்
தாழ்த்தினேன் நோக்கினாள்
தாக்கினேன்! தழுவினாள்
பாக்கி நான் சொல்லவோ!
தொட்டவிழ்ந்த துகிலெங்கே?                                                                                                                                 கட்டவிழ்ந்த மலரெங்கே?
மொட்டவிழ்ந்த இதழெங்கே?                                                                                                                                   பட்டவிழ்ந்த சிலையவளா?
(காட்சி முடிவு)
 (பாடும்)
two-sparrows02


- அகரமுதல73: பங்குனி22, 2046/  ஏப்பிரல்05,2015

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue