பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்

aa.ve,mullainilavazhagan
காட்சி – 11 

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     மரக்கிளை

நிலைமை  :
(நாடகம் பார்க்கும் ஆவலிலே
நவின்றிடும் பேடை எண்ணாது
கூடாக் கோபத்தை துணைக்கொண்டு
கொட்டுது சொற்களை ஆண்சிட்டு)
பெண் :     அப்பப்பா! இவர்கள் என்னதான்
பேசுகிறார்களோ புரியவில்லை!
எப்பவும் இவர்கள் இப்படித்தான்
பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே!
ஆண் :     அவர்கள் ஏதோ! பேசட்டுமே!
அதனால் நமக்கு வருவதென்ன?
செவனே என்று சில நாழி
பேசாதிருவேன் நீ கொஞ்சம்!
பெண் :     விசிலும் ஊதித் திரை நீக்கி
நாடகம் கூடத் தொடங்குதுபார்!
அசைவே இன்றி நாடகத்தை
அமர்ந்தே மக்கள் பார்ப்பதைப்பார்!

(காட்சி முடிவு)
(பாடும்)
Sparrow

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue