இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்


paavanar04

தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்

 “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை
ப.
            இந்தியை ஏன்கற்க வேண்டும்
                என்அம்மா என்அப்பா நான்
(இந்தி)

உ.1
     என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா
        பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே
(இந்தி)

2
      அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும்
                வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத
(இந்தி)

3
     அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார்
              உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து
(இந்தி)

     வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில்             அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே
(இந்தி)

5
     ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள்
          சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது
(இந்தி)
 6
   இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல்         அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன்
(இந்தி)

7
    மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர்
        தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன்
(இந்தி)

- ஞா. தேவநேயப் பாவாணர் : இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 203

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue