தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் - கவிஞர் இன்குலாபு
தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார்
- கவிஞர் இன்குலாபு
தமிழை
இனிமை என்றனர் பாவலர்கள்
தமிழைப்
புகழ் என்றனர் புலவர்கள்
தமிழைத்
தன்மானம் என்றவர் இலக்குவனார் !
தமிழ்
விழிப்புற்றது பாரதியால்
தமிழ்
எழுச்சி பெற்றது பாரதிதாசனால்
தமிழ்
போராடியது இலக்குவனாரால்
எந்த
ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர்
எந்த
ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர்
இருந்தும்
எல்லா
அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன !
எல்லா
அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின !
நாமார்க்கும்
குடியல்லோம் நமனை அஞ்சோம்
என்று
தொன்று
தமிழருக்கு
நிகழ்ந்தது
அனைத்தும் உணர்ந்த
இந்தத்
தொல்காப்பியருக்கு
சிறையும் உறைவாளும்
“மாசில்
வீணையும் மாலை மதியமும்” !
சில
முகவரிகள் தவறாக அமைகின்றன
பறவைக்குக்
கூண்டு
காவிரிக்குக்
கருநாடகம்
தமிழ்நாட்டுக்கு
இந்தியா !
ஆனால்
தமிழுக்கு
வாய்த்த சரியான முகவரி
தியாகராசர்
கல்லூரி
மதுரை.
ஒருபுறம்
ஆற்றுநீர்
வற்றினாலும்
ஊற்றுநீர்
வற்றாத
அழகிய
வைகைஅந்த மணலுக்கடியில்
எப்பொழுதும்
தமிழ் ஈரம் !
மறுபுறம்
பச்சை
இலைகளுக்கு
நடுவில்
பளிங்குத்
தாமரைப் பூப் போல
தெப்பக்குளமும்
மையமண்டபமும்
அதன்
பாசிபடிந்த
படிகளில்
நிலவு
வழுக்கி
விழும் !
நடுவில்
காற்று,தமிழாய் வீச,
உயிர்த்துக்கொண்டு
நிற்கும்
தியாகராசர்
கல்லூரி
வைகை
தாலாட்டும்
தமிழ்
நாகரிகம் !
நாணல்களின்
வெண்பஞ்சுப் பூக்களைத்
தலைக்குச்
சூடும்
நாரைகள்
!
நிலவுப்பாலில்
நின்று குளிக்கும்
கீற்றுத்
தென்னைகள்
கிளியோபாத்திராக்கள்
!
கரையெல்லாம்
பூக்கும்
கவிதைகள்
!
எங்களை
அடைகாத்த கூடுகள் !
புறநானூற்று
வரிகளிலிருந்து
புரவிகள்
பாயும் !
சிலம்புப்
பரல்கள்
மிண்டும்
தெரிக்கும் !
ஆண்டாள்
பாசுரங்களுக்குக்
காதல்
சுரக்கும் !
புரட்சிக்
கவிஞன் நிலவைப் பாடுவான் !
வகுப்புகள்
கவிதைகளின்
வாழ்ந்த
அனுபவம் !
தமிழ்
தன்னை இனிதாய்க் கேட்டது
எங்கள்
வகுப்பறைகளின்
வாசலில்
நின்று !
தமிழ்
தன்னை அழகாக்கிக் கொண்டது
எங்கள்
தோழமை வட்டத்தின்
கவிதைக்
கண்ணாடிகளில் !
தமிழ்
தன்னை விடுதலையாய் உணர்ந்தது
எங்கள்
இலக்குவனாரின் சொல்லிலும் செயலிலும் !
எங்கள்
பெருமை எதிலும் சிறந்தது
இலக்குவனாரின்
மாணவர் என்பது !
அவர்
நெஞ்சில் எரிந்த
விடுதலை
நெருப்பின்
பொறிகளுள்
ஒன்றைப்
பேனாவில்
ஊற்றினேன் !
இன்னும்
அணையாமல்
ஊறிக்
கொண்டிருக்கிறது !
அந்த
நடையின் திருப்பம் ஒன்றில்தான்
மனித
நடையின் துணிவைக் கற்றேன் !
அந்தப்
பார்வையின் கூர்மை ஒன்றில் தான்
கேள்விகள்
தொடங்கும்
நியாயம்
தெரிந்தேன் !
அந்த
மனிதனின் சொற்கள் அனைத்திலும்
உரிமை
வாழ்வின் பொருளை உணர்ந்தேன்!
இலக்குவனார்க்குச்
செய்வது இதுதான்
தமிழ்
தமிழர்
தமிழ்நாடு
ஆட்சியில்
உரிமையில்
விடுதலையில்
!
- புதியபார்வை நவம்பர் 16-30, 2014 பக்.38-39, தரவு : கேசவன்
- அகரமுதல 63 நாள் தை11,2046 / சனவரி 25, 2015
Comments
Post a Comment