பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
இலக்குவனார் திருவள்ளுவன் 25 சனவரி 2015 கருத்திற்காக.. ( தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல; கணவனே! வந்தேன்! பூங் : இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி பாங்காக வருவாய்! அருண் : என் குரல் கேட்டும் ஏன் இந்த மெளனம்? என்ன நீ! செய்தாய்? இயல்பாகச் சொல்வாய்! பூங் : அழைக்கும் உன் முறையோ இசையாகக் கேட்க தழைந்தே நான் நின்றேன்! வேறென்றும் இல்லை! இல்லமோத் தூய்மை இரு