பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்



(மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)
 Jpeg

காட்சி –3
அங்கம்    :     கவிஞர், அன்பரசன்,
இடம்      :     கவிஞரது குடில்
நிலைமை  :
(கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!
                   வீரிய நெஞ்சாம்! அன்பரசன்
தனக்குத்தானே குடில் முன்னே!
மனக்குறையோடு உரைக்கின்றான்!)
அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு
ஞாலப்பரிசு ஒரு குடிலோ;
வணக்கம் புலவரே! வணக்கம்!
மனநிறைவான வணக்கம்!
கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி
அன்ப   :  பார்த்து நாட்கள் ஆன தென?
கவி     :  பார்க்க வந்தீர்! நலந்தானே!
அன்ப :   பார்க்க நலமே! நீவீர் நலமா?
கவி     :  நலமே! நலமே! உடலும் உள்ளமும்
வலிமையாய் உள்ளதால்! நலமே! நலமே!
அன்ப   :  நாடகம் பார்க்க அழைத்ததால்! என்னை
ஓடோடி வந்தேன்! உம் சொல் எண்ணி!
கவி       :     அறிவேன் ஆமாம்! குடிலின் வாசலில்
சிறிதே அமர்ந்து நாடகம் காண்போம்!
அன்ப   :  தெருவின் கோடியில் இருக்கும் நமக்கும்
உருவம் தெரியும் வகையினில் பெரிய
மேடை அமைத்தே உள்ளார்! இதனால்
பாடம் நமக்கும் தெளிவாய் கேட்கும்!
கவி     :  கட்டிலை வீட்டு வாசலில் போட்டே
செட்டாய் அமர்ந்தே நாமும் காண்போம்!
(காட்சி முடிவு)
two-sparrows02

(பாடும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue