Skip to main content

தொழிலாளர் விண்ணப்பம் – பாரதிதாசன் : Labour application by Bharathidasan

தொழிலாளர் விண்ணப்பம் – பாவேந்தர் பாரதிதாசன்

 labourer01
காடு களைந்தோம் – நல்ல கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம்: – அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்.
வீடுகள் கண்டோம்: – அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்.
பாடுகள் பட்டோம் – புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் – புவி வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்.
அலைகடல் மீதில் – பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்.
பல தொல்லையுற்றோம் – யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.
உலையில் இரும்பை – யாம் உருக்கிப்பல் இயந்திரம் பெருக்கியுந் தந்தோம்.
labourer07
ஆடைகள் நெய்தோம் – பெரும் ஆற்றை வளைத்துநெல் நாற்றுகள் நட்டோம்.
கூடை கலங்கள் – முதல் கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்.
தேடிய பண்டம் – இந்தச் செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.labourer08
வாழ்வுக் கொவ்வாத – இந்த வையத்தை இந்நிலை எய்தப் புரிந்தோம்.
ஆழ்கடல், காடு, – மலை அத்தனை யிற்பல சத்தை எடுத்தோம்.
ஈழை, அசுத்தம் – குப்பை இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
கந்தை யணிந்தோம் – இரு கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் – பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்.
சந்தையில் மாடாய் – யாம் சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்
சிந்தை மெலிந்தோம் – எங்கள் சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
 bharathidasan09




Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue