Skip to main content

இரும்பாலைத் தொழிலாளி – பாரதிதாசன் iron mill worker , poem by Bharathidasan

இரும்பாலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்

mayday-statute01
அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ருயிராம்!
பழுப்பேறக் காய்ச்சிய இரும்பினைத் துாக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி-இவ்
வழுக்கு துணிக்குள்ளே…
பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி லைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே….
அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
.அறம்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ. என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே…
வெய்யில்தாழ வரச் சொல்லாடி-இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்எனறு
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கூரைக்குப்பின்னால் இருக்கும் தென்னை-அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?
வெய்யில் தாழ வரச் சொல்லடி
தாய் அயலுார் சென்றுவிட்டாள்; நாளை-சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள்
மாறிவிட்டால் சை எல்லாம் துாளே
வெய்யில் தாழ வரச் சொல்லடி.

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue