Skip to main content

பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன் : Flower girl - Bharathidasan, akaramuthala

பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன்

flowergirl01
சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!
பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து…..
தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு
பூவை  என்பேர் பூவை என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து….
காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ !
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து….

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue