முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்

முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்


 eezham-genocide05
உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை
விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும்
வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட
கற்ற கரும்புலி காடையர் பிடியில்
சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட
புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை
கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய்
வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய்
சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள்
 ltte-march01
மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய்
சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத்
தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே
தோற்ற மறியா தொல்குடி வேந்தரே!
கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும்
முற்றாய் எழுகவே முள்ளி வாய்க்கால்
நாற்றாய் முளைத்து நஞ்சகரை முடிக்கும்
காற்றாய்க் கனல்புனல் கலந்தக் கருவியாய்
ஏற்றம் கொண்டிட இன்றே கிளர்கவே!


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue