Skip to main content

உயிரில் இரத்தம் வடியும் – - ஈரோடு இறைவன்

உயிரில் இரத்தம் வடியும் – ஈரோடு இறைவன்  

eezham-genocide30
முள்ளி வாய்க்காலில்
வெந்து கிடக்கும்
உடல் நெருப்பில்
வேல் செய்யடா
சிங்கள நரிக்
கூட்டத்தின்
உடல் கிழித்து
தூள் செய்யடா
மே 18இல்
பாலச்சந்திரன்
ஈகம் தூக்கி
கண்ணீர் பெய்யடா
அடிபட்ட
புலி
அடி கொடுக்கும்
வரலாறு மெய்யடா
உங்கள் மரண நினைவு இருக்கும்
ஒவ்வொரு
நொடியும்
ஆனால்
மே 18 இல்
மட்டும்
உயிரில் இரத்தம்
வடியும்
நினைவே
நீங்களாய்
இருக்கும்போது
மறக்க முடியுமா?
இனியாவது
மனித இனமே
ஈழம் விடியுமா?


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue