Skip to main content

வீழ்ந்ததெல்லாம் விதை – உமா சுப்பிரமணியன்

வீழ்ந்ததெல்லாம் விதை – உமா சுப்பிரமணியன்

 

சுய மண்ணைச் சுடுகாடாய்,
பிணப்பண்ணை ஆக்குகின்றான்
சுண்டினால் சுருண்டு விடும்genocide139
சுண்டைக்காய் தேசத்தான்
சுழல் தெரிந்திருந்தும்
சூறையாட விட்டு விட்டோம்.
கருவியோடு களமிறங்கிய
காவல்தெய்வம் ஆயிரம்
குருதியோட, கொலையுண்ட
குடும்பங்களோ மாயிரம் நூறாயிரம்
பொறுமையோடு பார்த்திருக்க
பொம்மைகளா அழிந்தது?
ஞாலத்து மக்களிலே
ஈழத்துத் தமிழனின்
இனம் செத்துக் குவிவதைgenocide127
தினம் பார்த்துக் குமைவதை
விதியென்று விடலாமா தமிழனே
முடிவொன்று முனைவோம் வா
போராடத் துணிந்தெழுந்தான்
புலிக்கூட்டம் வழிநடத்த
அப்பாவித் தமிழர்களின்
கொடும்பாவியைக் கொய்திட
அர்ப்பணித்தான் வாழ்வெல்லாம்
சமர்ப்பித்தான் சக குடும்பம்
பிணம் தின்னும் கமுகனை,
பிடரி பிடித்துப் பேசலாம் வா
தாய்ப் பாலில் வீரம் பருகிய
தமிழனே  தயங்காதே – நம்
உமிழ் நீரில் மூழ்கி விடும்
உமி தேசம் உணர்ந்து கொள்
புவி வாழும் தமிழரெல்லாம்Heroes-Day-01
பொங்குகின்ற ஓர் நாளில்
ஒருமித்த கருத்தோடு
எண்பிக்க நிமிடம் போதும்
வீழ்ந்ததெல்லாம் விதைதான் என
விளக்கிச் சொல்

- அகரமுதல இதழ் 27: மே 18 துயரிதழ்
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue