நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே


நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே

genocide109
ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்
எலும்பும் சதையுமாக
எரிந்து கொண்டிருந்தது
முள்ளிவாய்க்கால்.
இறந்த தாயின் முலையில்genocide134
குழந்தை பால் குடிக்க
இழுத்து வந்து
நெருப்பு மூட்டினர்
இருளின் நடுவே
சிலுவை தாங்கி
இறைவன் வருவான்
என நிலவைப் பார்த்தோம்
கண்களை மூடி
இது உன் விதி என்றது
எங்களின் வீட்டினுள்
யூதர்கள் நுழைந்தனர்
யேசுவைக் கேட்டனர்
ஆயிரம் ஆயிரம் சிலுவையில்
அவர்களை அறைந்தனர்
அடையாளம் காட்ட யூடாசு வந்தான்
மாவீரன் கல்லறையில்
மீண்டும் இரத்தம் வடிய
உயிர்த்திருந்தவர்களை
இன்னொருமுறை
புதைத்தனர்
கனவுகள் உடைந்து
கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது
இரத்தமும் சதையுமாய்
எழுப்பிய சுவருக்குள்
எங்கள் முகங்கள்
எரிந்து கருகின.
முள்ளிவாய்க்கால் முழுமையாகmullivaaykkal-london-cross01
மூச்சிழந்தது
ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது
அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்
கங்கையில் மிதந்த
பிணங்களைப் போல்genocide121genocide121genocide122
எங்களின் வயல்களில்
பிணங்கள் நீந்தின
எல்லாமே எரிந்து முடிந்தது
மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து
எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க
அங்கு யாரும்
சாட்சிகள் இல்லை
எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர
எஞ்சியிருப்பதற்கு
எங்களிடம் ஒன்றுமில்லை
மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்
கரைந்த படி திரிய
 genocide137
நாறிக் கிடந்தன பிணங்கள்
நாங்கள் மனிதரில்லை என்றே
மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்
புத்தரின் காவியினால்.
தாகம் தீர்த்தது சத்திய சோதனை
எங்களின் குருதியினால்.
eeahzam-blood01
நன்றி  : மா.கெம்புகுமார்
வழக்குரைஞர்
9245581684


 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue