கூடைமுறம் கட்டுவோர் – பாரதிதாசன் : akaramuthala poem by Bharathidasan

கூடைமுறம் கட்டுவோர் – பாவேந்தர் பாரதிதாசன்

basket_making01
கசங்கு சீவடி பரம்பு சொற்றடி
கைவேளை முடித் திடலாம்-நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயபைக் கொடுத் திடலாம்
பிசைந்து வைத்துள மாவும்தேனும்
பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்
கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே-இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப்பதுதான் வேலை
காடுவெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண்ணாட்டி
சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது-நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடியாது
பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும்-அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue