Skip to main content

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் – பாரதிதாசன் - akaramuthala may day issue bharathidasan

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் – பாவேந்தர் பாரதிதாசன்

chunnam01
மந்தையின் மாடு திரும்பையிலே-அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!
தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன்
துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன்
எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி!
கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்
கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக்
கோடை படுத்திடும் நாளில்? என்றாள்
தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு தென்றான்.
bharathidasan05
 
 

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue