Posts

Showing posts from May, 2014

மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார்

Image
மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      25 மே 2014       கருத்திற்காக.. (சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. “ நம்மிற்சிறந்தோர் இம்மை யுலகத்து இல் ” (பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா? தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே! தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” என்பதுதான். தோழி: “நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர் கூறியது உண்மைதான். அவர் உங்களிடத்திலும் நீங்கள் அவரிடத்திலும்  கொண்ட அன்பு மிகவும் சிறந்தது அல்லவா? உங்களைப் போன்ற ஒத்த அன்புடையவர்களை இவ்வுலகத்தில் காணமுடியாதுதான். தலைவி: அவர் அன்புகனியக் கூறியதும், அன்பால் நெகிழ்ந்த உளத்தோடு, நம் நெற்றியில் பரந்தமயிரைத் தடவிக் கூட்டியதும் மறக்க முடியுமா? தோழி: அதுமட்டுமல்ல. அவர் இங்கு வருங்கால் பரிசிலர் போலக் கூசிக்கூசி வருதலும், வந்து கடைப்புற

“அகர முதல” கண்டு மலைத்தேன். - (உ)ருத்ரா இ.பரமசிவன்

Image
“அகர முதல” கண்டு மலைத்தேன். இலக்குவனார் திருவள்ளுவன்      25 மே 2014       கருத்திற்காக.. “அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துகளுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன் அகரமுதல இதழ்28    

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

Image
எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை இலக்குவனார் திருவள்ளுவன்      25 மே 2014       கருத்திற்காக..   முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய  இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும் நேரம் எது? இனத் துரோகிகள் ஒழிவதெப்போது? தனி ஈழம் மலர்வதெப்போது? ( மே 18 நி ரு வாணமாய் செவ்வா ன ம் அடைந்த எம் தொப்புள் கொடி உறவுகளின் நினைவாக ….) - ஆதிரை அகரமுதல இதழ்28